Search This Blog

Sunday 21 July 2013

வெற்றி வரும் வழி

வீழ்ந்தவனிடம் கேட்டுப் பார்
விழாதிருக்க வழி சொல்வான்
எழுந்தவனிடம் கேட்டுப் பார்
வாழ்வதற்கு வழி சொல்வான்
வலிகளிடம் கேட்டுப்பார்...
தவறுகளை எடுத்துரைக்கும்
பழிகளிடம் கேட்டுப்பார்
புல்லர்களை இனங்காட்டும்
சுமைகளைக் கேட்டுப்பார்
சுறு சுறுப்பை பதிலாக்கும்
கவலைகளைக் கேட்டுப்பார்
உறுதியினை எடுத்து வைக்கும்
குழப்பங்களைக் கேட்டுப்பார்
தெளிவு தனை முடிவாக்கும்
இருளினைக் கேட்டுப்பார்
விடியல்கள் காட்டி நிற்கும்
தோல்விகளைக் கேட்டுப்பார்
வெற்றி வரும் வழி சொல்லும்

-தமிழலை

No comments:

Post a Comment